states

img

காஷ்மீர் 2-ஆம் கட்டத் தேர்தலில் 54 சதவிகித வாக்குகள் பதிவு!

ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீர் 2-ஆம் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி 54 சதவிகித வாக்குகள் பதிவாகின.

ஜம்முவின் ஸ்ரீமாதா வைஷ்ண வதேவி தொகுதியில் 75.29 சத விகித வாக்குகளும், பூஞ்ச்-ஹவேலி தொகுதியில் 72.71 சத விகித வாக்குகளும், குல்ப்கர் (பழங்குடியினர்) தொகுதியில் 72.19, சூரன்கோட் தொகுதியில் 72.18 சதவிகித வாக்குகள் பதிவா கியுள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக கான்சாஹிப்பில் 67.70 சதவிகித வாக்குகளும், கங்கன் (பழங்குடியினர்) தொ குதியில் 67.60 சதவிகித வாக்குக ளும், சார்-ஐ-ஷரீப் தொகுதியில் 66  சதவிகித வாக்குகளும் பதிவாகின. குறைந்தபட்சமாக ஹப்பக்கடல் தொகுதியில் 15.80 சதவிகித வாக்குகளே பதிவாகியிருந்தன.

ஜம்மு - காஷ்மீரில் மொத்த முள்ள 90 தொகுதிகளில் முதற் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18 அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 61.13 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, ஜம்மு பிராந்தியத்தில் ரியாசி, ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்க ளில் உள்ள 11 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் ஸ்ரீநகர், புத்காம், கந்தர்பால் மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு புதனன்று தோ்தல் நடைபெற்றது. இதில், 25 லட்சத்து 78 லட்சம் பேர் வாக்க ளிக்க தகுதி பெற்றிருந்த நிலை யில், மாலை 5 மணி நிலவரப்படி 54 சதவிகித வாக்குகள் பதிவாகி யுள்ளன.

இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடுவோரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன் னாள் முதல்வருமான உமர் அப்துல் லா, பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் அப்னி கட்சியின் தலைவர் அல்தாப் புகாரி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

ஜம்மு பிராந்தியத்தில் நிறுத்தப் பட்ட பாஜக வேட்பாளர்களில் பாதி பேர் கூட வெற்றிபெறுவது சந்தே கம் தான் என்று கூறப்படுகிறது. அதேபோல, காஷ்மீர் பிராந்தியத் தில், மொத்தமுள்ள 47 தொகுதிக ளில், வெறும் 19 தொகுதிகளுக்குத் தான் வேட்பாளர்களையே பாஜக நிறுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு - காஷ்மீா் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிகட்டத் தோ்தல் அக்டோபா் 1 அன்று 40 தொகுதிகளில் நடைபெறுகிறது. அக்டோபா் 8 அன்று முடிவுகள் வெளியாக உள்ளன.